Thursday, January 2, 2020 - 11:22:28 IST   
Text Size

You are here

DEPARTMENT OF TAMIL

திராவிடமொழிக் குடும்பத்தின் மூலமொழி தமிழ் .திராவிடக் குடும்பத்தின் முதன்மையானமொழி மூத்தமொழி திராவிட மொழிகளின் தாய்மொழி நம் செம்மொழியாம் தமிழ்.இந்த மொழிக்கூட்டத்தில் மொத்தம் 26 மொழிகள். அத்தனைக்கும் மூல மொழியாக நம் தாய்மொழியாக தமிழ் இருப்பது பெருமைக்குரிய ஒன்று.


.இலக்கண இலக்கிய வளமுடைய மொழிகள் பலவாகும்.இவற்றுள் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள்சிலவே.அவை தமிழ் சீனம் சமஸ்கிருதம் இலத்தீன் ஈப்ரூ கிரேக்கம் ஆகியவை. இவற்றுள் ஈப்ரூவும் இலத்தீனும் வழக்கிலிருந்து போய்விட்டது.இன்றும் நிலைத்துநிற்கும் மொழிகளுள் நம் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

ஒரு மொழி நிலைத்து நிற்க பழமையும் வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாக ,எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக நீதிமன்ற மொழியாக, நிலைபெற வேண்டும்.

தமிழ் மொழியின் நோக்கங்கள்

கலை அறிவியல் படிப்பில் குறைந்த செலவில் படிப்பை முடித்து விரைவில் வேலை வாய்ப்பு பெறும் துறைகளில் ஒன்று தமிழ்த்துறை.தமிழில் பட்டம் பயில்வது மொழி வளர்ச்சிக்கு உதவும். இதனுடன் கல்வியியல் முதுகலைபடித்தால் பள்ளி கல்லூரிகளில் வேலைவாய்ப்பினை பெறலாம்.பேச்சுக்கலை எழுத்துக்கலை மென்மேலும் வளரும். சிறந்த பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் கல்வியாளர்களை உருவாக்குவதில் தமிழ்த்துறை சிறப்பாக விளங்குகிறது.

“தீட்டிவிடும் கல்விபோட்டியிடும் உள்ளம்” என்பதே தமிழ்த்துறையின் கல்விக் கொள்கையாகும்.இதற்கேற்ப பல்கலைக்கழகத்தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி பெறவும் தமிழகம் எங்கும் நடைபெறும் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்து கொள்ளவும் எம்துறைமாணாக்கர்களுக்கு சிறந்த பயிற்சியும் போதிய வசதிகளும் தரப்படுகின்றன.தொடக்கத்திலிருந்தே ஆய்வுச்சூழலை அறிமுகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு பருவத்திலும் பயிலரங்கோ அல்லது கருத்தரங்கோ கல்லூரியளவில் நடத்தி எம்துறைமாணாக்கர்களுக்கு ஆய்வு கட்டுரை எழுதும் பயிற்சி அளிக்கப்படுகிறது.உலகமே உள்ளங்கையில் உழல்கிற இன்றையகாலத்தில் உலகத் தொடர்பு ஏற்படுத்துவது மிகமிக தேவையான ஒன்றாகும்.

Eligibility of the course:

B.A. TAMIL A pass in 10+2 with TAMIL as a Language Paper

கல்லூரி அளவில் ஆண்டுதோறும் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி கவிதைப் போட்டி நடத்தி மாணாக்கர்களின் கூடுதல் திறத்தை புலப்படுத்தி வருகிறது தமிழ்த்துறை.போட்டிகளில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு கல்லூரி ஆண்டு விழாவில் எம்தாளாளர் திரு.த.ஆனந்த் அவர்கள் பரிசு வழங்கி சிறப்பிப்பார்.

“பண்புடையார்பட்டுண்டுஉலகம்அதுவின்றேல் மண்புக்குமாய்வதுமண்”.

எனும் திருவாக்கிற்கேற்ப மாணக்கர் ஒவ்வொருவரையும் “பண்புமிகுந்த படிப்பாளியாகவும் படிப்பு இயைந்த படைப்பாளியாகவும் படைப்பு ஆற்றலித்த நாட்டுப் பற்றாளியாகவும் உருவாக்குதல் என்பதே இத்துறையின் குறிக்கோளாகும்.மாணக்கர்களுக்கு பயன்படும் வகையில் பொதுநூலகமும் துறைநூலகமும் தனித்தனியே அமைந்துள்ளன.ஏறத்தாழ 3000 நூல்களுக்கு மேல் தமிழ்த்துறை நூலகத்தில் உள்ளன.அரசு விதிமுறைக்கு உட்பட்டு நெருக்கடி இல்லாத வகையில் வகுப்பறைகள் அமைந்துள்ளன.அனைத்து ஆண்டு மாணாக்கர்களுக்கும் தனித்தனி வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.

Back to Top